சில்மிஷம் செய்தவரை துரத்தி பிடித்து பொலிஸில் ஒப்படைத்த தாய், மகள்

சில்மிஷம் செய்தவரை துரத்தி பிடித்து பொலிஸில் ஒப்படைத்த தாய், மகள்

டெல்லியில் பொது இடத்தில் தவறாக நடக்க முயன்ற இளைஞரை இளம்பெண் ஒருவர் அவரின் தாயுடன் சேர்ந்து துரத்தி பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

டெல்லி சானக்யபுரி பகுதியில் உள்ள நேரு பூங்காவிற்கு 20 வயது இளம்பெண் ஒருவர் அவரது தாயுடன் சென்றிருந்தார். 

அப்போது அங்கே வந்த மன்ஜீத் என்னும் நபர் இளம்பெண்ண பார்த்து தகாத முறையில் பேசியதாக தெரிகிறது. மன்ஜீத் அப்பெண்ணிற்கு ஏற்கனவே அறிமுகமானவர் என்பதால் அப்பெண் அவரை அங்கிருந்து வெளியேறும்படி எச்சரித்துள்ளார். 

ஆனால், அதனை பொருட்படுத்தாத மன்ஜீத் தொடர்ந்து அப்பெண்ணிடம் தகாத முறையில் நடக்க அப்பெண் பொலிஸில் புகார் அளித்தார். 

அதை தொடர்ந்து தப்பியோட முயன்ற மன்ஜீத்தை தாயும், மகளும் சேர்ந்து பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.