சிறப்பாக விளையாட எதிர்பார்த்துள்ளேன் - ஹர்பஜன் சிங்

 

எதிர்காலத்தில் கலந்துகொள்ளும் கிரிக்கெட் போட்டிகளில் சிறப்பாக விளையாட எதிர்பார்த்துள்ளதாக மீண்டும் அணிக்கு திரும்பியுள்ள இந்திய வீரர் ஹார்பஜன் சிங் குறிப்பிட்டுள்ளார்.

 


நியூசிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு எதிராக இருபதுக்கு-20 கிரிக்கெட் போட்டிகளுக்கான அணியில், ஹார்பஜன் சிங் இணைக்கப்பட்டுள்ளார்.

இடைவெளியின் பின்னர் போட்டிகளில் கலந்துகொள்வது சவாலான விடயமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கடந்த காலங்களில் நடைபெற்ற விடயங்கள் தொடர்பில் கருத்திற்கொள்ளாது, தற்கால மற்றும் எதிர்கால இலக்குகள் குறித்து அதிக கவனம் செலுத்த வேண்டுமென ஹார்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.