சிசுவொன்றை பணம் கொடுத்து வாங்கிய இருவர் கைது – யாழில் சம்பவம்

சிசுவொன்றை பணம் கொடுத்து வாங்கிய இருவர் கைது – யாழில் சம்பவம்

பிறந்து ஒரு நாளான குழந்தை ஒன்றை பணம் கொடுத்து வாங்கிய இரண்டு நபர் யாழ் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட பிரதிப்பொலிஸ் மா அதிபர் எரிக்பேரேரா தெரிவித்துள்ளார்.

இச்சம்பவம் கடந்த 13ஆம் திகதி இடம்பெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டார். பிறந்த ஒரு நாளான குழந்தை ஒன்றை அல்லைப்பிட்டியைச் சேர்ந்த ஒரு தாய் விற்பனை செய்துள்ளார்.

இதனை வாங்கிய பாசையூரைச் சேர்ந்த நபர் ஒருவரும் இந்த குழந்தையை வாங்குவதற்கு உறுதுணையாக செயற்பட்ட ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதுடன் குறித்த குழந்தையினை விற்பனை செய்த தாயினை பொலிஸார் தேடி வருவதாக அவர் தெரிவித்தார்.