சிங்கள கடற்படையினரால் கைதுசெய்யப்பட்ட சீன மீனவர்களை விடுவிக்க சீன அரசுகோரிக்கை!

மட்டக்களப்பிலிருந்து 13 மைல்களுக்கு அப்பால் இலங்கைக் கடற்பரப்பினுள் நுழைந்ததாகத் கூறப்படும் 37 சீனப் பிரஜைகள் சிறீலங்கா கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

200 மைல்களுக்கு அப்பால் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடுவதற்கான ஒப்பந்தமொன்று மீன்பிடி அமைச்சுடன் சீனா செய்துகொண்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர். மேற்படி சீனர்களுடன் ரோலர் படகுகளில் இருந்து மீன்பிடித்ததாகத் தெரிவிக்கப்படும் 2 சிறீலங்காவினை சேர்ந்தவர்களும் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கைதுசெய்யப்பட்டுள்ள அனைவரும் திருகோணமலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளார்கள்.
இம்மீனவர்களை சட்டத்தின்படி கையாளுமாறும் உண்மையை கண்டறிந்து இவர்களை விடுதலை செய்யுமாறும் சீனத் தூதரகம் கோரியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.