சட்டவிரோத வெடிபொருட்களைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட மூவர் கைது

யாழ்குடா கடற்பரப்பில் சட்டவிரோத வெடிபொருட்களைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட மூன்று மீனவர்கள் கடற்படையினரால் இன்று (11) காலை கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ். குருநகரைச் சேர்ந்த தந்தை ஒருவரும் மகன்மார் இருவருமே ´டைனமைட்´ வெடி பொருளைப் பயன்படுத்தி மீன் பிடியில் ஈடுபட்டுள்ளனர்.

இவர்கள் யாழ்குடா பாலதீவு கடற்பகுதியில் மீன்பிடியில் ஈடுபட்டுள்ளனர்.

ரோந்து சென்ற கடற்படையினரால் இந்த மூவரும் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்களிடமிருந்து டைனமைட், சட்ட விரோத வெடி மருந்துகளும் கைப்பற்றப்பட்டு யாழ்.பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவர்களிடம் தொடர்ந்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

நாளைய தினம் இம் மூவரும் யாழ்.நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக யாழ்.பொலிஸார் தெரிவித்துள்ளனர்.