சட்டவிரோதமாக இலங்கை கடற்பரப்புக்குள் பிரவேசித்த இலங்கையர் மூவர் கைது

சட்டவிரோதமாக படகு மூலம் இலங்கை கடற்பரப்புக்குள் பிரவேசித்த இலங்கையர்கள் மூவர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக யாழ். பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த வெள்ள்ப்க் கிழமை கச்சதீவு கடற்படையினரால் குறித்த மூவரும் கைது செய்யப்பட்டு யாழ். பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

2007ஆம் ஆண்டு காலப்பகுதியில் இலங்கையில் இருந்து இந்தியாவிற்கு சென்றவர்கள், இந்திய மீனவர்களுக்கு பணம் செலுத்தி படகின் மூலம் இலங்கைக்கு நோக்கி பயணித்து கொண்டிருக்கும் வேளையில் கச்சதீவு பகுதியில் வைத்து இலங்கை கடற்படையினரால் மூவரும் கைது செய்யப்பட்டு யாழ். பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.