கொழும்பு - கண்டி மார்க்கத்திலான நகர்சேர் கடுகதி ரயிலின் எஞ்ஜின் கம்பஹா தாரளுவ பகுதியில் செயலிழந்துள்ளது.
இன்று முற்பகல் 8.35 அளவில் கோட்டை ரயில் நிலையத்திலிருந்து இந்த ரயில் புறப்பட்டதாக ரயில்வே கட்டுபாட்டு நிலையம் குறிப்பிடுகின்றது.
இந்த ரயிலில் வேறொரு என்ஜினை இணைத்து கண்டி நோக்கி புறப்படுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கட்டுப்பாட்டு நிலையம் தெரிவிக்கின்றது.
முற்பகல் 11 மணியளவில் கண்டியை சென்றடைய வேண்டியிருந்த இந்த நகர்சேர் கடுகதி ரயிலின் என்ஜின் முற்பகல் 9.30 அளவில் செயலிழந்துள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் மேலும் குறிப்பிடுகின்றது.