கொலை வழக்கில் ஒருவருக்கு 8 வருட சிறை தண்டனை

கொலை வழக்கில் ஒருவருக்கு 8 வருட சிறை தண்டனை

வடலியடைப்பில் குமாரசாமி இராஜசிங்கம் என்பவரின் கொலை வழக்கின் முதலாம் சந்தேக நபருக்கு யாழ். மேல் நீதிமன்றம் 8 வருட கடுழிய சிறைத் தண்டணை விதித்துள்ளது.

2007ஆம் ஆண்டு ஆவணி மாதம் 02 ஆம் திகதி பண்டத்தரிப்பு வடலியடைப்பில் குமாரசாமி இராஜசிங்கம் என்பருக்கு மரணம் விளைவித்ததாக குற்றஞ்சாட்டப்பட்டு 4 நபர்கள் மீது சட்டமா அதிபரினால் குற்றம் சாட்டப்பட்டது.

இராஜேஸ்வரன் கணேஸ்வரன், சின்னத்துரை சாந்தகுமார், கனகசபை இராஜேஸ்வரன் கவிதா சாந்தகுமார் ஆகியோரே குற்றஞ்சாட்டப்பட்ட 4 எதிரிகளும் ஆவார்.

2ஆம் எதிரி வெளிநாடு சென்றதால் அவர் சமூகமளிக்காமலேNயு அவருக்கு எதிராக வழக்கு விசாரணை மேற்கொள்ளப்டபட்டது. சட்ட வைத்திய அதிகாரி மற்றும் பொலிஸார் உட்பட 4 சாட்சிகளும் இன்று யாழ். மேல் நீதிமன்றில் சாட்சியமளித்தனர்.

யாழ் மேல் நீதிமன்ற ஆணையாளர் ஜே. விஸ்வநாதன் முதலாம் எதிரிக்கும் 8 வருட கடுழிய சிறை தண்டணை வழங்கி தீர்ப்பளித்தார். ஏனைய சந்தேகநபர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.