கூடங்குளம்: தீக்குளிக்க முயன்ற 3 பேர் கைது!

கூடங்குளம்: தீக்குளிக்க முயன்ற 3 பேர் கைது!

கூடங்குளம் அணு உலையை மூட வலியுறுத்தி நெல்லையில் இன்று தீக்குளிக்க முயன்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

கூடங்குளம் அணு உலையில் எரிபொருள் நிரப்புவதை உடனே ரத்து செய்ய வேண்டும், 144 தடை உத்தரவை வாபஸ் பெற வேண்டும், கூடங்குளம் பகுதியில் குவிக்கப்பட்டுள்ள போலீஸ் படையை திரும்ப பெற வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ் புலிகள் அமைப்பினர் பாளை வண்ணாரப்பேட்டை செல்லப்பாண்டியன் சிலை முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

பின்னர் திடீரென அவர்கள் உடலில் மண்எண்ணை ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். உடனே சம்பவ இடத்துக்கு பாளை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் விரைந்து வந்து தீக்குளிக்க முயன்ற தமிழ் புலிகள் மாவட்ட தலைவர் மாயா, துணை செயலர்கள் பிரபாகரன், தமிழ்வேந்தன் ஆகிய 3 பேரை கைது செய்தனர்