குவைத்தில் இருந்து நாடு திரும்பிய பெண் வைத்தியசாலையில் அனுமதி

 

குவைத்தில் துன்புறுத்தல்களுக்கு இலக்காகி நாடு திரும்பியுள்ள பெண் ஒருவர் பலாங்கொடை வைத்தியசாலையில் சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

 


இந்தப் பெண்ணின் உடலில் இருந்து இரண்டு ஊசிகள் நேற்று மாலை சத்திரசிகிச்சை மூலம் அகற்றப்பட்டதாக பலாங்கொடை வைத்தியசாலையின் அத்தியட்சகர் குறிப்பிட்டார்.

மெதபெத்த, கல்தொட்ட பகுதியைச் சேர்ந்த 26 வயதான இந்தப் பெண் பலாங்கொடை ஆதார வைத்தியசாலையில் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றார்.

களனி பிரதேசத்தில் இயங்குகின்ற முகவர் நிறுவனம் ஒன்றின் ஊடாக கடந்த டிசம்பர் மாதம் தான் வெளிநாடு சென்றிருந்ததாக துன்புறுத்தலுக்கு இலக்கான பெண் கூறினார்.

குவைத்தில் தாம் பணிபுரிந்த வீட்டில் வேலைப்பளு அதிகம் என்பதால் அந்த நாட்டிலுள்ள தொழில் முகவர் நிறுவனம் ஒன்றை நாடியதாகவும், அங்கு தொழில் புரிந்த இலங்கைப் பெண் ஒருவர் தன்னை துன்புறுத்தியதாகவும் பாதிக்கப்பட்ட பெண் தெரிவித்தார்.