கிளிநொச்சி விபத்தில் படுகாயம் அடைந்த பெண் உயிரிழப்பு!

கிளிநொச்சி பகுதியில் இடம்பெற்ற உந்துருளி விபத்தில் படுகாயம் அடைந்த பெண் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


கடந்த சனிக்கிழமை கிளிநொச்சி நகர்பகுதியில் வீதிஓரமாக நடந்துகொண்டிருந்த பெண்மீது உந்துருளி மோதிக்கொண்டதில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
கிளி இரத்தினபுரத்தினை சேர்ந்த 59 அகவையுடைய இராஜேஸ்வரி என்ற பெண் படுகாயம் அடைந்த நிலையில் கிளிநொச்சி மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப்பட்டு மேலதிக சிகிச்சைக்கா யாழ்போதனா மருத்துவமனைக்கு எடுத்து செல்லப்பட்டு சிகிச்சை பெற்றுவந்துள்ள நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளார்