திருச்சியில் இருந்து 110 பயணிகளுடன் இலங்கைக்கு பயணித்த விமானம் மீ்ண்டும் திருச்சி விமான நிலையத்தை சென்றடைந்துள்ளது.
திருச்சியில் இருந்து புறப்பட்ட விமானத்தில் கழுகு மோதியதால், விமானத்தின் கண்ணாடி உடைந்துள்ளது.
இதையடுத்து விமானம் திருச்சி விமான நிலையத்திலேயே நிறுத்தி வைக்கப்பட்டது.
இதில் இருந்த 80 பயணிகள் வேறு விமானம் மூலம் இலங்கைக்கு அனுப்பப்பட்டனர்.
பின்னர் சீர் செய்யப்பட்ட இலங்கை விமானம் நேற்று இரவு பயணிகள் இன்றி இலங்கை வந்தடைந்தது.