கறுகறு கூந்தல் வேண்டுமா?

பெண்களுக்கு கறு நிற கூந்தலின் மீது ஒரு தனி மோகம் உண்டு. ஆனால், நமது வாழ்க்கைமுறையில் ஏற்பட்ட மாற்றத்தால் இப்போது ஹேர் கலர்ஸ், ஷாம்பூ போன்ற ரசாயன பொருட்களை அதிகம் உபயோகப்படுத்துகிறோம். இவற்றால், கூந்தலின் இயற்கையான அழகு, நிறம், அடர்த்தி ஆகியவை குறைந்து கூந்தல் வலுவிழந்து தோன்றும். இத்தகைய அபாயகரமான பொருட்களிடமிருந்து கூந்தலை பாதுகாத்து, அதன் இயற்க்கை அழகை தக்கவைக்க இதோ சில எளிய டிப்ஸ்…
 
சுத்தமான தேங்காய் எண்ணெய்யில் கறி வேப்பிலைத் துளிர் சேர்த்து கொதிக்க வைத்து கூந்தலில் தடவிக் கொள்ளுங்கள்.
ஒவ்வொரு முறை எண்ணெய் தடவும்போதும் மண்டை ஓட்டுப் பகுதித் தோலை (Scalp) விரல் நுனியால் மசாஜ் செய்யத் தவறாதீர்கள்.
ஷாம்பூ, சோப்பு வகைகளுக்கு `டாட்டா’ சொல்லுங்கள். அதற்குப் பதில் சிகைக்காய், அரப்பு, பாசிப்பருப்பு மாவு போன்ற இயற்கையானவற்றைத் தேர்ந்தெடுங்கள்.
 
வெந்தயத்தை ஒரு நாள் இரவு ஊறவைத்து, மறுநாள் அதனை நன்கு அரைத்து கூந்தலில் பூசுங்கள். கூந்தல் மென்மையாகவும் அழகாகவும் மாறும்.
 
முட்டையின் வெள்ளை கரு மற்றும் எலுமிச்சை சாறு ஆகியவற்றை கலந்து கூந்தலில் தடவினால் பொடுகு தொல்லை நீங்கி கூந்தல் பிரகாசிக்கும்.
 
உணவில் கீரை, முளைக்கட்டிய பயறு வகைகள், உலர் திராட்சை, பேரீட்சை போன்றவைகளைச் சேர்த்துக் கொள்ளுங்கள்.
இரவில் பால் குடிப்பதை மறக்க வேண்டாம்.
 
கூந்தலில் அழுக்கு, சிக்கு சேராமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
 
எப்போதும் சுத்தமான நீரிலேயே கூந்தலை கழுவ வேண்டியது அவசியம். குளிர்ந்த அல்லது இளம் சூடான தண்ணீரையே பயன்படுத்துங்கள்.
டென்ஷனைக் குறையுங்கள். மகிழ்வோடு இருங்கள். அகத்தின் மகிழ்ச்சி முகத்தில் மட்டுமல்ல முடியிலும் தெரியும்.
வாசனைத் திரவியங்கள், ஹேர் ஸ்பிரே போன்றவைகளைத் தவிருங்கள்.
 
அடிக்கடி தலைவலியா? அலட்சியப்படுத்தாதீர்கள். டாக்டரிடம் காட்டுங்கள். தலைவலியால் முடி உதிர்வது நிச்சயம்.
பேன், பொடுகு, முடி நுனி வெடிப்பு, போன்ற வகைகளுக்கு டாக்டரின் ஆலோசனையைப் பெறுங்கள்