கனகராயன் குளத்தில் வீதியைக் கடக்க முற்பட்ட பாடசாலை மாணவி விபத்தில் பலி

கனகராயன் குளத்தில் வீதியைக் கடக்க முற்பட்ட பாடசாலை மாணவி விபத்தில் பலி

A9 வீதி கனகராயன்குளம் பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் பாடசாலை மாணவி ஒருவர் பலியானார். இவர் மீது மோதிய மோட்டார் சைக்கிள் சாரதி நிறுத்தாது தப்பியோடிவிட்டதாக அங்கிருந்து கிடைத்த தகவல்கள் தெரிவித்துள்ளன.

கனகராயன்குளம் பகுதியில் நேற்று பகல் 11.30 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கனகராயன்குளம் மகா வித்தியாலயத்தில் தரம் ஐந்தில் கல்விகற்கும் குஞ்சுக்குளம் கிராமத்து மாணவி ஒருவரே இச்சம்பவத்தில் மரணம் அடைந்துள்ளார்.

குறித்த மாணவி வீதியை கடக்க முற்பட்ட போது விபத்து இடம்பெற்றுள்ளது.

மாணவி மீது மோதிய மோட்டார் சைக்கிள் சாரதி நிறுத்தாமல் தப்பியோடிவிட்டார்.

கனகராயன்குளம் பிரதேச பொலிஸார் சாரதியை தேடிவருகின்றனர்