எட்டு உணவுப் பொருட்களின் விலைகளை குறைக்க நடவடிக்கை

 

இலங்கை கூட்டுறவு மொத்த விற்பனை நிலையங்கள் ஊடாக விற்பனை செய்யப்படுகின்ற எட்டு உணவுப் பொருட்களின் விலைகளை நாளை முதல் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

 


ஜனாதிபதியின் பணிப்புரைக்கு அமைய நுகர்வோருக்கு அதிகபட்சம் நிவாரணத்தை வழங்கும் வகையில் இன்று இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக, கூட்டுறவு உள்நாட்டு மற்றும் உள்நாட்டு வர்த்தக அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய வெள்ளை சீனி, நெத்தலி, ரின் மீன், அரிசி, பருப்பு உள்ளிட்ட எட்டு வகையான உணவுப் பொருட்களின் விலைகள் நாளை முதல் குறைக்கப்படவுள்ளன