ஈராக்கில் 5500 பேரை கொன்ற ஐ.எஸ்.தீவிரவாதிகள்!

ஈராக்கில் 5500 பேரை கொன்ற ஐ.எஸ்.தீவிரவாதிகள்!
ஈராக்கில் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் இஸ்லாமிய தேசம் என்ற புதிய நாட்டை உருவாக்கியுள்ளனர். அங்கு வாழும் மைனாரட்டிகளான யாஷிடி மக்களை மதம் மாற கட்டாயப்படுத்துகின்றனர்.
 
மதம் மாற மறுப்பவர்களை கொன்று குவித்து வருகின்றனர். பலர் தீவிரவாதிகளிடம் இருந்து தப்பிக்க அங்கிருந்து வெளியேறி விட்டனர்.
 
கடந்த ஜூன்மாதம் முதல் இது வரை அங்கு 5500 பேரை தீவிரவாதிகள் கொன்றுள்ளனர்.
 
இந்த தகவலை ஐ.நா.வின் ஈராக் பிரதிநிதி நிகோலே மிலாடெனோவ் தெரிவித்துள்ளார்.