இலங்கை - மே.தீவுகள், ஆஸி. - பாகிஸ்தான் அணிகள் அரையிறுத்திக்குத் தெரிவு

இருபதுக்கு இருபது உலகக் கிண்ண தொடரின் சுப்பர் 8 சுற்றில் குழு இரண்டில் இருந்து அரையிறுதிக்குத் தெரிவாகும் அணியாக பாகிஸ்தான் மாறியுள்ளது.

இன்று இடம்பெற்ற தென்னாபிரிக்க அணியுடனான போட்டியில் இந்திய அணி ஒரு ஓட்டத்தால் வெற்றிகொண்ட போதும் ஓட்ட சராசரி விகிதத்தில் பாகிஸ்தான் அணி முன்னிலையில் உள்ளதால் அரையிறுதிக்குச் செல்லும் வாய்ப்பை இந்தியா இழந்தது.

இதன்படி சுப்பர் 8 சுற்றில் குழு 1ல் இருந்து இலங்கை மேற்கிந்திய தீவுகள் அணியும் குழு 2ல் இருந்து அவுஸ்திரேலியா, பாகிஸ்தான் அணிகளும் தெரிவாகின.

அரையிறுதிச் சுற்றில் இலங்கை பாகிஸ்தானையும் அவுஸ்திரேலியா மேற்கிந்திய தீவுகள் அணியையும் சந்திக்கின்றன.