இலங்கை - நியூசிலாந்து போட்டி மழையால் கைவிடப்பட்டது

சுற்றுலா நியூசிலாந்து அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான முதலாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டுள்ளது.

இத்தகவலை இலங்கை கிரிக்கெட் நிறுவனம் உறுதி செய்துள்ளது.

நியூசிலாந்து அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான முதலாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி இன்று கண்டி பல்லேகல மைதானத்தில் பகலிரவு போட்டியாக இடம்பெறவிருந்தமை குறிப்பிடத்தக்கது.