இந்தியாவிலிருந்து 46 பேர் தாயகம் திரும்பியுள்ளனர்

இந்தியாவில் அகதிமுகாம்களில் தங்கியிருந்த இலங்கையர்கள் சிலர் நேற்று நாடு திரும்பியுள்ளனர்.

15 குடும்பங்களைச் சேர்ந்த 46 பேர் நாட்டை வந்தடைந்துள்ளதாக விமான நிலையத்தின் குடிவரவு, குடியகல்வு பிரிவு குறிப்பிடுகின்றது.

இந்த இலங்கையர்களின் விபரங்கள் குடிவரவு - குடியகல்வு அதிகாரிகளால் பதிவுசெய்யப்பட்டதை அடுத்து, தேசிய புலனாய்வுப் பணியகத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளனர்.

அதன்பின்னர் அவர்களை சமூகமயப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது. நாடு திரும்பிய குழுவினரில் 18 பெண்களும், 28 ஆண்களும் அடங்கியுள்ளதாக விமான நிலைய குடிவரவு, குடியகல்வு பிரிவு தெரிவிக்கின்றது.