அவுஸ்ரேலியா செல்லமுற்பட்ட 41 பேர் புத்தளத்தில் கைது!

ஆஸ்திரேலியாவுக்குத் செல்ல முயன்ற 41 பேர் வென்னப்புவ பகுதியில் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


37 தமிழர்களும் 4 முஸ்லிம்களுமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
வென்னப்புவ பகுதி ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த இவர்கள் குறித்து காவல்துறையினருக்கு கிடைத்த தகவலையடுத்து இவர்களனைவரும் கைதுசெய்யப்பட்டதாக தெரியவந்துள்ளது
கைது செய்யப்பட்ட நபர்கள் குறித்து வென்னப்புவ காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் இன்று வென்னப்புவ நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தபடுவர் எனவும் பொலிஸார் கூறியுள்ளனர்.
இவர்கள் அனைவரும் மட்டக்களப்பு யாழ்ப்பாணம் கிளிநொச்சி மற்றும் திருகோணமலை ஆகிய இடங்களைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.