அவுஸ்திரேலியா செல்ல முயற்சித்த மேலும் 26 பேர் கைது

அவுஸ்திரேலியா செல்ல முயற்சித்த மேலும் 26 பேர் கைது

 

சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்கு செல்வதற்கு முயற்சித்த மேலும் 26 பேர் இன்று அதிகாலை கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

 


வாழைச்சேனை கிழக்கு கடற்பரப்பில், இவர்கள் கைது செய்யப்பட்டதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் கொமாண்டர் கோசல வர்ணகுலசூரிய தெரிவித்தார்.

இரண்டு படகுகள் மூலம் இவர்கள் பயணித்துக் கொண்டிருந்ததாக கடற்படையின் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.

கைதுசெய்யப்பட்டவர்கள் மேலதிக விசாரணைகளுக்காக திருகோணமலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.