அவுஸ்திரேலியா அரையிறுதிக்குத் தகுதி - பாகிஸ்தான் முன்னிலையில்

இலங்கையில் இடம்பெற்று வரும் இருபதுக்கு இருபது உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் குழு 2ல் இருந்து அரையிறுதிப் போட்டிக்குச் செல்லும் வாய்ப்பை அவுஸ்திரேலிய அணி பெற்றுள்ளது.

கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் இடம்பெற்ற இன்றைய போட்டியில் பாகிஸ்தான் அவுஸ்திரேலிய அணிகள் மோதிய நிலையில் பாகிஸ்தான் அணி 32 ஓட்டங்களால் வெற்றிபெற்ற போதும் அவுஸ்திரேலிய அணி அரையிறுதி வாய்ப்பை பெற்றது.

போட்டியின் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற அவுஸ்திரேலிய அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்ய, முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 149 ஓட்டங்களைப் பெற்றது.

பதிலுக்கு 150 என்ற வெற்றியிலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்களை இழந்து 117 ஓட்டங்களை மாத்திரமே பெற்று தோல்வியடைந்தது.

இதன்படி குழு 2ல் இருந்து அவுஸ்திரேலியா அரையிறுதிக்குச் செல்ல வாய்ப்பு பெற்ற போதும் குழு 2ல் இருந்து இரண்டாவது அணியாக அரையிறுதிக்குச் செல்லும் அணி எது என்பது இன்று இடம்பெறும் இந்திய - தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான போட்டி முடிவில் தெரியவரும்.

இப்போட்டியில் இந்திய அணி பெரிய வெற்றியைப் பெற்றால் அரையிறுதிக்குச் செல்லும் வாய்ப்பைப் பெறும் இல்லாவிடின் பாகிஸ்தான் அரையிறுதிக்குச் செல்லும்.