தமிழ்நாடு இலங்கை அகதிகள் முகாமில் 5 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த சந்தேகத்தில் கல்லூரி மாணவன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சின்னப்பள்ளிக்குப்பம் அகதிகள் முகாமைச் சேர்ந்த எஸ். பிரிட்டன் (வயது -18) என்ற இளைஞனே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
மாலை நேர வகுப்பு நடத்தி வரும் இந்த இளைஞன் அவரிடம் கல்வி கற்கச் சென்ற சிறுமியையே பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் சிறுமியின் தாயார் பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டை அடுத்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாதிக்கப்பட்ட சிறுமி வேலூர் வைத்தியசாலையில் வைத்திய பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.