"ஒரு வீட்டையா வது பெற்றுக் கொடுங்கள்" வலி.வடக்கு மக்கள்-அவல நிலைக்கு தீர்வு கிடைக்குமா?

"ஒரு வீட்டையா வது பெற்றுக் கொடுங்கள்" வலி.வடக்கு மக்கள்-அவல நிலைக்கு தீர்வு கிடைக்குமா?
யாழ்.குடாநாட்டில் கடந்த சில தினங்களாக தொடர்ச்சியான மழை பெய்து வருகின்ற து. இதனால் சபாபதிப்பிள்ளை, கோணப்புலம், நீதிவான் ஆகிய முகாம்களில் மக்களின் வீடுகளுக்குள்ளும் வெள்ளநீர் புகுந்துள்ளது.
 
மேலும் பாதுகாப்பு மற்றும் வசதிகளற்ற வீட்டின் கூரைகளில் ஒழுக்கு மற்றும் நிலம் ஊறும் நிலையும் காணப்படுகின்றது. இந்நிலையில் குறித்த பிரச்சினைகளை தீர்த்துக் கொடுக்குமாறு மக்கள் உருக்கமான வேண்டுகோளினை விடுத்துள்ளனர்.
 
இது குறித்து மக்கள் தெரிவிக்கையில்,
 
20வருடங்களு க்கு முன்னர் எங்களை இங்கே குடியேற்றும்போது கொடுத்த தகர வீட்டிற்கு மண் சுவர்களை அமைத்துக் கொண்டு வாழ்கிறோம்.
 
ஒவ்வொரு மழை காலமும் எமக்கு பெரும் நரகமாகவே மாறுகின்றது. மழை பெய்யத் தொடங்கினால் எமக்கு கூலிவேலை கிடைக்காது. அதுபோதாதென கூரை ஒழுகும், நில ம் ஊறும் அதே பிரச்சினை இப்போதும் தொடர்கின்றது.
 
இது குறித்து நாங்கள் ஒவ்வொரு வருடமும் கூறிக்கொண்டிருக்கிறோம். ஆனால் எமக்கு மட்டும் எவ்விதமான பயனும் கிடைக்கவில்லை. தற்போது மழை பெய்கி றது. மழை பெய்தால் வெளியில் நிற்பதை போன்று எங்கள் வீட்டுக்குள் தண் ணீர் நிற்கும்.
 
இதனால் கடந்த 3 தினங்களாக வீட்டில் நின்மதியாக சமைக்க முடியாமல், உறங்கள் முடியாமல், அவல வாழ்வு வழ்ந்து கொண்டிருக்கிறோம்.
 
எங்கள் பிரச்சினைகளை உற்றுப் பாருங் கள். எமது பிரச்சினைகளையும் மனிதாபிமான அடிப்படையில் எங்களை சொந்த மண்ணில் மீள்குடியேற்றுங்கள் என அந்த மக்கள் கண்ணீர்மல்க உரு க்கமான வேண்டுகோள் விடுத்துள்ளனர்.