மீண்டும் ஜெயசூரியா

மீண்டும் ஜெயசூரியா

இலங்கை அணியின் சனத் ஜெயசூரியா, மேற்கிந்திய தீவுகள் அணியின் பிரைன் லாரா ஆகியோர் கட்டாரில் இடம்பெறவுள்ள கண்காட்சி கிரிக்கெட் போட்டியில் மோதவுள்ளனர்.     

டோஹா, கட்டாரிலுள்ள வெஸ்ட் எண்ட் பார்க் கிரிக்கெட் மைதானத்தில் முன்னாள் ஜாம்பவான்களான லாரா, ஜெயசூரியா ஆகியோரின் அணிகள் கண்காட்சி கிரிக்கெட் போட்டியில் இம் மாதம் 6ஆம் திகதி மோதவுள்ளன.   

இந்நிலையில் உலக லெவன் அணிக்கு மேற்கிந்தியத் தீவுகள் அணியின்  முன்னாள் ஜாம்பவான் பிரையன் லாராவும் ஆசிய லெவன் அணிக்கு இலங்கை அணியின் முன்னாள் ஜாம்பவான் சனத் ஜயசூரியாவும் தலைமை தாங்குகின்றனர்.