இந்தியா - மேற்கிந்தியா இடையே இன்று மோதல்

இந்தியா - மேற்கிந்தியா இடையே இன்று மோதல்

இந்தியா , மேற்கிந்தியா அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி, கொச்சி நேரு விளையாட்டரங்கில் இன்று பிற்பகல் 2.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. 

சுற்றுப்பயணம் மேற்கொண்டு இந்தியா வந்துள்ள மேற்கிந்தியா அணி 5 ஒருநாள், ஒரு 20-20 மற்றும் 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளது.

 இருப்பினும் பந்தை எறிவதாக சர்ச்சையில் சிக்கியுள்ள நட்சத்திர சுழற்பந்துவீச்சாளர் சுனில் நரைன் இந்த தொடரில் இருந்து விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளதும், அதிரடி தொடக்க வீரர் கிறிஸ் கேல் காயம் காரணமாக ஓய்வெடுத்து வருவதும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது. 

இந்திய அணியைப் பொறுத்தவரை, அஷ்வினுக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ள நிலையில், அமித் மிஷ்ரா, ஜடேஜா இருவரும் சுழற்பந்துவீச்சுக்கு பொறுப்பேற்க உள்ளனர். 

புதுமுக வீரர் குல்தீப் யாதவுக்கு வாய்ப்பு கிடைப்பது சந்தேகமே. ரோகித் ஷர்மா காயமடைந்துள்ளதால், ஷிகர் தவானுடன் இணைந்து முரளி விஜய் அல்லது அஜிங்க்யா ரகானே தொடக்க வீரராகக் களமிறங்க உள்ளனர்.