“நெத்திலி மீன்” திதிப்பு செய்யும் முறை

“நெத்திலி மீன்” திதிப்பு செய்யும் முறை
தேவையான பொருட்கள் :
 
நெத்திலி மீன் – கால் கிலோ
பெரிய வெங்காயம் – ஒன்று
தக்காளி – 2 பெரியது
பச்சை மிளகாய் – 4
சாம்பார் பொடி – 5 தேக்கரண்டி
தேங்காய் பொடியாக நறுக்கியது – அரை கப்
கறிவேப்பிலை – சிறிது
பட்டை, லவங்கம், சோம்பு – சிறிது
எண்ணெய் – 50 மில்லி
உப்பு
மஞ்சள் தூள் – கால் தேக்கரண்டி
இஞ்சி பூண்டு விழுது – ஒரு மேசைக்கரண்டி
 
செய்முறை :
 
நெத்திலியை சுத்தம் செய்து மஞ்சள் தூள், உப்பு கலந்து பிரட்டி வைக்கவும். தேங்காயை நைசாக அரைத்து வைக்கவும். வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாயை நறுக்கி வைக்கவும்.
 
பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் சோம்பு, பட்டை, லவங்கம் தாளிக்கவும். இதில் கறிவேப்பிலை சேர்த்து பின் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
 
வெங்காயம் முக்கால் பாகம் வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கி பின் பச்சை மிளகாய், தக்காளி சேர்த்து வதக்கவும்.
 
தக்காளி குழைந்ததும் தூள் வகைகள் சேர்த்து பிரட்டி, சிறிது நீர் விட்டு மசாலா வாசம் போகும் வரை கொதிக்க விடவும்.
 
இதில் மீனை சேர்த்து மூடி வேக விடவும்.
 
கடைசியாக அரைத்து வைத்துள்ள தேங்காய் சேர்த்து ஒரு கொதி வந்ததும் இறக்கவும்.
 
சுவையான நெத்திலி மீன் திதிப்பு தயார்.