சீக்கிரம் பாத வெடிப்பு மறைஞ்சு பாதம் அழகா மாறும் --- பாட்டி வைத்தியம்,

சீக்கிரம் பாத வெடிப்பு மறைஞ்சு பாதம் அழகா மாறும் --- பாட்டி வைத்தியம்,

அப்போது கல்லூரியில் படிக்கும் தனது மகளை அழைத்துக் கொண!டு வந்தாள் பூங்கோதை.

‘என்ன பாட்டி, நெத்தியில பட்டையெல்லாம் பலமா இருக்கு... இன்னைக்கு என்ன விசேஷம்..." என்று கேட்டுக் கொண!டே பாட்டியின் அருகில் மகளுடன் வந்து உட்கார்ந்தாள்.

‘ஆமாடியம்மா... இன்னிக்கி ஆவணி ஞாயிற்றுக் கிழமை. சின்ன வயசில் இருந்தே ஆவணி ஞாயிற்றுக் கிழமை அன்னைக்கு ஒரு பொழுதா இருக்குறது பழக்கம். இப்பத்தான் காக்கைக்கு சோறு வச்சுட்டு, நானும் விரதத்தை விட்டேன். அது சரி... என்ன தாயும் மகளுமா என்னைத் தேடி வந்துருக்கீங்க... என்ன சங்கதி..."

வெற்றிலையை மென்று கொண!டே பாட்டி கேட்ட கேள்விக்கு பூங்கோதை உடனடியாகப் பதிலைச் சொல்லாமல், மகளிடம் சொல்லி அவளது கால் பாதங்களைக் காண!பிக்கச் சொன்னாள்.
அந்த இளம் பெண!ணின் பாதங்களில் நடக்கும் போது சில வெடிப்புகளில் இருந்து ரத்தமே கசிந்து விடுமாம்.

மகளின் பாதங்களைப் பாட்டியிடம் காண!பித்த பூங்கோதை, ‘நடக்கவே முடியாமல் சிரமப்படுறா பாட்டி... அது மட்டுமில்லாம பட்டணத்துல படிக்கிற பொண!ணு வேறயா... பித்த வெடிப்புனால காலை வெளியே காட்ட வெட்கப்படுறா... என்னென்னமோ கிரீம்களையெல்லாம் தடவிப்பாத்தாச்சு... எதுலயும் சரியா வரல்லை... அதுதான் கலேஜூக்கு லீவப் போட்டுட்டு ஊருக்கு வந்துட்டா... கால்ல இருக்க வெடிப்பு மறைஞ்சாத்தான் போவேங்குறா... இதுக்கு நீதான் ஏதாவது மருந்து சொல்லணும் பாட்டி."

அந்த இளம் பெண!ணின் பாதங்களைப் பார்த்த பாட்டி, ‘கால் பாதத்துல ரத்த ஓட்டம் கம்மியா இருக்கிறதால ஏற்படுறதுதான் இந்த வெடிப்பு... காலைச் சுத்தமாவும் வச்சுக்கணும்... அப்புறம், சில பேரு சிக்கனம்குற பேருல தரக்குறைவான செருப்பைப் போடுறாங்க. வெளில போற பெரும்பாலான நேரங்கள்ல நாம செருப்போடதான் இருக்குறோம். அது மேலதான் நிக்குறோம். பட்டணத்துல கேட்கவே வேணாம். காலைல மாட்ற செருப்பை ராத்திரித்தான் கழட்டுவாங்க.. அப்ப ஒரு நாள்ல பாதிநேரம் செருப்பு மேலதான் அவங்க நிக்கிறாங்க... அந்த அளவு முக்கியத்துவம் உள்ள செருப்பு தரமானதா இருக்க வேண!டாமா... தரக்குறைவான செருப்புகள் ஏற்படுத்துற அழுத்தத்துலயும், வெப்பத்துலயும் காலப்போக்குல கால்ல வெடிப்பு ஏற்படுது. பல காரணங்களால ஏற்படுற இந்த வெடிப்பை எளிதில் குணப்படுத்தலாம்..."

‘...இதுக்கு நான் சொல்ற மருந்தை பூசுங்க... சீக்கிரம் வெடிப்பு மறைஞ்சு பாதம் அழகா மாறும்..." என்று சொன்ன பாட்டி அதற்கான மருந்தையும் கூறினாள்.

‘ஒண!ணும் பெரிசா இல்லடியம்மா... ஆமணக்கு இலை, சீந்தில்கொடி, குப்பை மேனி மூணையும் சேர்த்து தேங்காய் எண!ணெயில் சேர்த்துக் காய்ச்சி வடிகட்டி வச்சுக்கணும். அந்த எண!ணெயை இரவு படுக்கப் போகுமுன் பாதத்தைச் சுத்தமாத் தேச்சுக் கழுவிட்டு, வெடிப்பு மேல பூசணும். தொடர்ந்து இந்த எண!ணெயைப் பூசிக்கிட்டே வந்தா பாதவெடிப்பு மறைஞ்சு பளபளன்னு பாதம் மின்னும்.... அப்புறமென்ன..."

பாட்டி சொன்ன மருந்தைக் கேட்டுக் கொண!ட பூங்கோதை பாட்டிக்கு நன்றி கூறி மகளை அழைத்துக் கொண!டு அவற்றை வாங்குவதற்காக தமிழ் மருந்துக் கடையை நோக்கிப் புறப்பட்டாள்.