குடும்பமொன்றில் 101 ஆண்டுகளுக்கு பின் முதல் தடவையாக பெண் குழந்தையொன்று பிறந்த சம்பவம் பிரித்தானியாவில் இடம்பெற்றுள்ளது.
டெவொன் பிராந்தியத்தைச் சேர்ந்த ஜெரேமி சில்வெர்டன் (43 வயது) மற்றும் அவரது மனைவி டானியலே அன்ட்ரூஸ் (36 வயது) ஆகியோருக்கே இவ்வாறு பெண் குழந்தையொன்று பிறந்துள்ளது. பிறந்த குழந்தைக்கு பொப்பி என பெயர் சூட்டப்பட்டுள்ளது.
சில்வெர்டனின் குடும்பத்தில் 1913 ஆம் ஆண்டிலிருந்து ஆண் குழந்தைகள் மட்டுமே பிறந்துள்ளனர். இவ்வாறு 4 தலைமுறைகளாக ஆண் வாரிசுகளை மட்டுமே கொண்ட குடும்பத்தில் பெண் குழந்தையொன்று முதல் தடவையாக பிறப்பது 10,000 பிறப்புகளுக்கு ஒரு பிறப்பு என்ற வீதத்தில் இடம்பெறும் அபூர்வ நிகழ்வாகும்.