அகதிகளை நாடுகடத்த 3 மில்லியன் டொலர் செலவு

அகதிகளை நாடுகடத்துவதற்காக, ரொனி எபட் அரசாங்கம் 3 மில்லியன் டொலர்களை செலவிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.   

அவுஸ்திரேலிய குடிவரவுத் திணைக்களத்தின் ஆவணங்களை மேற்கோள் காட்டி அவுஸ்திரேலியாவின் ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.   

தங்களின் சுய விருப்பத்தின் அடிப்படையில் அவுஸ்திரேலியாவில் இருந்து வெளியேற தீர்மானித்த அகதிகளுக்கே இந்த தொகை வழங்கப்பட்டுள்ளது.   

அத்துடன் இந்த ஆவணத்தின் படி, கடந்த வருடம் செப்டம்பர் மாதம் முதல் கடந்த ஜுலை வரையில் ஆயிரத்து 151 அகதிகள் அவுஸ்திரேலியாவில் இருந்து நாடுகடத்தப்பட்டுள்ளதாக தெரிகிறது.