இலங்கை செய்திகள்

மேர்வினுக்கு ஏமாற்றம்: மாலக்க சில்வா மீண்டும் விளக்கமறியலில்

பம்பலபிட்டி இரவு களியாட்ட விடுதியில் பிரித்தானிய ஜோடி மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் மேர்வின் சில்வாவின் மகன் மாலக்க சில்வாவிற்கு நான்காவது முறையாகவும் பிணை வழங்க மறுக்கப்பட்டுள்ளது.    இன்று (25) நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்ட மாலக்க சில்வா...

ஜனாதிபதி தேர்தலுக்கு முன் விண்ணப்பிப்போருக்கு தேசிய அடையாள அட்டை: ஆட்பதிவுத் திணைக்களம்

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர், தேசிய அடையாள அட்டைக்கான விண்ணப்பிக்கும் அனைவருக்கும் தேசிய அடையாள அட்டையை விநியோகிக்கவுள்ளதாக ஆட்பதிவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. தேர்தல் கண்காணிப்பு அமைப்புக்களின் நிதியுதவியுடன் நடமாடும் சேவைகளை தொடர்ந்தும் முன்னெடுக்கவுள்ளதாக திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம்...

தமிழரின் பிரச்சினைக்கு தீர்வு காண ஜனாதிபதி மஹிந்தவால் மட்டுமே முடியும்!- டக்ளஸ்

தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு காண ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவினால் மாத்திரமே முடியும். தமிழ் பேசும் மக்களின் ஒத்துழைப்புடன் அவர் மூன்றாவது தடவையாகவும் ஜனாதிபதி ஆக தெரிவாவார் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். வரவு செலவுத் திட்ட குழுநிலை விவாதத்தின் இறுதி நாளான...

வரவு செலவுத் திட்டம் 95 மேலதிக வாக்குகளால் பாராளுமன்றில் நிறைவேற்றம்

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு அரசாங்கத்தின் 2015ம் நிதியாண்டுக்கான வரவு செலவுத் திட்டம் சற்றுமுன்னர் பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்டுள்ளது.    இந்த வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக 152 வாக்குகளும் எதிராக 57 வாக்குகளும் பெறப்பட்டதாக பாராளுமன்ற செய்தியாளர்...

பண்டாரநாயக்க பிறந்த தினத்தில் ஜனாதிபதித் தேர்தல்: பண்டாரநாயக்கவினருக்கு சாதமாக அமையுமா?

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ ஜோதிடர்களின் ஆலோசனைக்கு அமைய ஜனாதிபதித் தேர்தலை ஜனவரி 8 ஆம் திகதி சுபதினத்தில் நடத்த தீர்மானித்துள்ளார்.   எனினும் அந்த திகதி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஸ்தாபகரான முன்னாள் பிரதமர் எஸ்.டப்ளியூ. ஆர்.டி பண்டாரநாயக்காவின் பிறந்த  தினம் என்பது...

ரணிலை பிரதமராக நியமிக்கும் புரிந்துணர்வு உடன்படிக்கை அடுத்த வாரம்

ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளராக போட்டியிடும் மைத்திரிபால சிறிசேன வெற்றி பெற்றால் அவரது அரசாங்கத்தின் பிரதமராக ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவை நியமிக்க வேண்டும் என்று அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகள் இடையில் ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட இணக்கத்திற்கு அமைவான புரிந்துணர்வு...

மஹரகமவில் ஜனாதிபதிக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம்! - மதுரங்குளியில் ஒருவர் தற்கொலை - வன்முறைகள் ஆரம்பம்!

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை வெற்றிபெறச் செய்வோம் என்ற கோஷத்துடன் மஹரகமவில் தற்போது ஆர்ப்பாட்டமொன்று நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.   மஹரகம அமைப்பாளரும், நகராதிபதியுமான காந்தி கொடிகாரவின் ஆதரவில் அமைச்சர் தினேஷ் குணவர்த்தனவின் மஹஜன எக்சத் பெரமுண கட்சி இந்த ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு...

ரணிலும்,மைத்திரியும் மூடிய அறைக்குள் சந்திப்பு!

எதிர்க்கட்சிகளின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன நேற்று ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்துள்ளார். ஸ்ரீகோத்தாவில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.   தாம் பொதுவேட்பாளராக போட்டியிடுவதாக அறிவித்த பின்னர் மைத்திரிபால சிறிசேன, ரணில் விக்கிரமசிங்கவை...

தம்மை எதிர்த்த சரத்தின் நிலையே மைத்திரிக்கும் : மகிந்த

தம்மை எதிர்த்து போட்டியிட்ட சரத் பொன்சேகாவுக்கு ஏற்பட்ட நிலைமையே மைத்திரிபால சிறிசேனவுக்கும் ஏற்படும் என்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.  அலரி மாளிகையில் இடம்பெற்ற அரச ஆயுர்வேத வைத்தியர்களுக்கான போசனம் வழங்கல் நிகழ்வில் ஜனாதிபதி இந்தக்கருத்தை வெளியிட்டார்.  ஜனாதிபதி தேர்தலில்...

அவசரமாக கூடுகிறது கூட்டமைப்பு?

தமிழ் தேசிய கூட்டமைப்பு, ஜனாதிபதி தேர்தல் தொடர்பான இறுதி தீர்மானத்தை எதிர்வரும் திங்கட்கிழமை எடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.   தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையிலான சந்திப்பு ஒன்று அந்த கட்சியின் தலைவர் இரா.சம்பந்தனின் தலைமையில் எதிர்வரும் திங்கட் கிழமை...

<< 1 | 2 | 3 | 4 | 5 >>